Saturday 3 March 2012

பிட்டுக் கவிதைகள்

அகப்படும் பெண்களெல்லாம்
அழகிகளாக இருப்பதில்லை
அழகாக இருப்பவள்களெல்லாம்
அகப்படுவதுமில்லை
அகப்பட்டதை
அனுபவிப்பதறிவு

நேற்றைய தோல்விகளை
இன்று நினைத்துத் துவண்டால்
நாளையும் தோல்வியே
நாளை என்பது என்றும் வரும்
இன்று என்பது இன்று மட்டுமே

வாழ்க்கை என்பது
சீனத் தயாரிப்புக்கள் போலே
உத்தரவாதமற்றது
வாழ்க்கை என்பது
Las Vegas நகர் போலே
சூதாட்டங்கள் நிறைந்தது

மெழுகு திரியொளியில்
காதலர் உணவருந்துவர்
உணர்வுகள் தூண்டிவிட
தமிழ்நாட்டு மக்களே கவனம்


பிட்டுக் கவிதை
ஆவி பிடித்து
பிட்டு வேகும்
உன் நினைவு பிடித்து
என் ஆவி வேகுது

Friday 2 March 2012

பொய் நாக்கள் அடக்கிட ஐநா முன்றலில் நாம் திரள்வோம்

கரிய இருளினில் கடினவழியினில்
நேற்று நாம் நடந்தோம்
கொடிய போரினில் அரிய ஊரினில்
அனைத்தும் நாம் இழந்தோம்
வாழ்ந்த மனையினில் ஆழ்ந்த துயரினில்
தாழ்ந்து நாம் சரிந்தோம்
பச்சிளம் குழவியும் பட்டிளம் கன்னியும்
பாதகர்க்கு இரைகொடுத்தோம்
கருவிலும் கருகிட உருவின்றிப் பொசுங்கிட
செருவினில் நாம் வீழ்ந்தோம்
சூழ்ந்திட்ட பகையின் சூழ்ச்சிவலையில்
சீக்குண்டு நாம் தாழ்ந்தோம்
ஒன்றுபடா குணத்தில் கூறுபட்ட நிலையில்
இழக்கக் கூடாததெல்லாம் இழந்தோம்
வாய்பொன்று வருகுது ஒளியொன்று தெரியுது
வீழ்ச்சியது நிலையிலை என உணர்வோம்
வீறு கொண்டு நாம் எழுவோம்
தலைப் பா பாடிட தலைப்பாகை கிடைத்திட
தலைவன் வழி நீ நட

மாட்சியினைத் தேடி மீட்சியினை நாடி
ஆட்சியினை நாம் எடுப்போம்
 
இனிவா வாழ்வென துணிவாய் நீ எழ
ஜெனிவா நகர் அதிரும்
பொய் நாக்கள் அடக்கிட ஐநா முன்றலில்
நாம் திரள்வோம்

Thursday 1 March 2012

தேர்ந்தெடுத்த நகைச்சுவைகள்

Who said car names don't have meanings ? ? ?

FIAT: Failure in Italian Automotive Technology.
FORD: For Only Rough Drivers.
HYUNDAI: Hope You Understand Nothing's Driveable And Inexpensive....
VOLVO: Very Odd Looking Vehicular Object.
PORSCHE: Proof Of Rich Spoiled Children Having Everything.
OPEL: Old People Enjoying Life
TOYOTA: The One You Only Trust, Always.
HONDA: Hung Over, Now Driving Away
KIA : Kills In Accident
And the last.
BMW: Bring Me Women

காதலில் சொதப்புவது எப்படி
உங்கள் காதலிக்கு "me 2 luv u" என்று ஒரு SMS அனுப்பவும்.

In exam a student left the page blank,
At the bottom of sheet he kept flowers and wrote:
In memory of my memory which recently passed away

கணவனின் மண்டையில் மனைவி சமையல் பாத்திரத்தால் ஒரு போடு போட்டாள்.
"ஏண்டீ என்னை அடிச்சாய்" என்றான் கணவன்.
"உன் சட்டைப் பையில் ஜோதிகா என்ற பெயரும் ரெலிஃபோன் நம்பரும் எழுதியபடி ஒரு துண்டு இருந்தது....." என்றாள் மனைவி
"அடிப்பாவி அது நான் நேற்று பந்தயம் கட்டிய குதிரையின் பெயர்"
"மன்னிச்சுக்கடா கண்ணா" என்றபடி தலையில் தடவிக் கொடுத்தாள் மனைவி
கணவன் குளித்துவிட்டு வந்தான். மீண்டும் மண்டையில் ஒரு போடு போட்டாள்
"ஏண்டீ என்னைத் திரும்பவும் அடிச்சாய்"
"உன் குதிரை நீ குளித்துக் கொண்டிருக்கும் போது போன் செய்தது".

King's Servant enrolled his Donkey in a race and won.
The local paper read:
'SERVANT'S ÅSS WON'.
The king was so upset with this kind of publicity
that he ordered the servant to get rid of the donkey.
He gave the donkey to the queen.
The local paper then read:
"QUEEN HAS THE BEST ÅSS IN TOWN".
The king fainted. Queen sold the donkey to a farmer for 10.
Next day paper read:
"QUEEN SELLS HER ÅSS FOR 10".
This was too much, KING ordered the queen to buy back the donkey
And leave it to the jungle.
The next Headlines:
"QUEEN ANNOUNCES HER ÅSS IS WILD & FREE"
The king died next day

என்னை நினைவில் வைத்திரு என்பர் சிலர்
என்னை மறக்காதே என்பர் சிலர்
என்னைப் பிரியாதே என்பர் சிலர்
நான் வித்தியாசமானவள்
மவனே என்னை மறந்து பார்!!!!!

In England, a barber shop had a customer who was a soldier..
After haircut when he gave money, the barber refused & said:
You fight 4 the people of the country, I wont take money from you'..
Next day he found some flowers & sweets outside his shop ..
Then a doctor came, again the barber didn't take money & said:
'You help the ill people of my country, I wont take money from you' ..
Next day he found an expensive clothing outside his shop!!
Then a Pakistani came, barber didn't take the money from him too & said:
"You are our visitor, I wont take money from you" ..
Next day ...There were 10 Pakistanis waiting in a line outside his shop!!


"Life asked Death,
Why people Love me and hate you ?
Death replied because you are a "Beautiful" Lie.
and i am a "Painful" Truth.

Wednesday 29 February 2012

நகைச்சுவைத் தத்துப் பித்துவங்கள்

உன் முத்தம் நன்றாயிருக்க
தினமும் என்னை முத்தமிடு
பற்பசை

நூறாண்டு நீ வாழ்ந்தால்
தொண்ணூற்றொன்பது ஆண்டும்
முன்னூற்று அறுபத்து நான்கு நாட்கள்
நான் வாழ வேண்டும்
நீ இன்றி ஒரு நாள் வாழக்கூட
என்னால் முடியாது

வெற்றியடைந்தவுடன் ஓய்ந்து விடாதே
அடுத்த வெற்றிக்கு உழை
உன் வெற்றி வெறும் அதிட்டம்
எனச் சொல்லப் பல வாய்கள் காத்திருக்கின்றன.

அப்பா: மகனே உனக்கு தம்பிப்பாப்ப வேணுமா தங்கைப் பாப்பா வேணுமா?
மகன்: எனக்கு உன் தங்கச்சியின் பாப்பா வேணும்பா.

அது ஒரு மனித இறைச்சி விற்கும் கடை
அங்கு அரசியல்வதியின் இறைச்சிக்கு
அதிக விலையிடப்பட்டிருந்தது
வெட்டித் துப்பரவாக்க
அதிக நேரம் செல்லுமாம்.

தூரத்தை மீட்டரில் அளப்பாய்
எடையை கிலோவில் அளப்பாய்
என் காதலை எதில் அளப்பாய்


காதலி: நாளை எனது பிறந்த நாளுக்கு என்ன பரிசு தருவாய்?
காதலன்: என்னையே தருவேன்.
காதலி: இப்படி ஒரு மட்டமான பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

உன்னோடு இருக்கையில் நான் நானாக இல்லை
நீயின்றி இருக்கையில் நானே இல்லை



வீடுகள் பெரிதாகின்றன
இல்லறம் சிறிதாகின்றது
மருத்துவம் வளர்கிறது
ஆரோக்கியம் குறைகிறது
பிரபஞ்சத்தில் எல்லை வரை அறியத் துடிக்கிறோம்
பக்கத்து வீட்டில் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை

நேற்று என்பது தேர்வு
இன்று என்பது பரிசோதனை
நாளை என்பது எதிர்பார்ப்பு

உறவினருக்கும் நண்பனுக்கும் என்ன வித்தியாசம்?
நீ மருத்துவ மனையில் இருக்கும் போது நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்பவர் உறவினர்.
நர்ஸ் எப்படி இருக்கிறாள் என்று கேட்பவன் நண்பன்


புகைப்படத்திற்காக ஒரு கணம்
செய்யும் ஒரு புன்னகை
அதற்கு அழகூட்டுகிறது
அதையே தொடர்ந்து செய்தால்
வாழ்க்கைக்கு அழகூட்டும்

விக்கிபீடியா: எனக்கு எல்லாம் தெரியும்
கூகிள்: என்னிடம் எல்லாம் உண்டு
ஃபேஸ்புக்: எனக்கு எல்லோரையும் தெரியும்
இணையம்: நானின்றி நீங்கள் இல்லை
மின்சாரம்: நானின்றி அணுவும் அசையாது

Tuesday 28 February 2012

கணனிகளிலும் கைப்பேசிகளிலும் உங்கள் தகவல் "திருடுபவர்கள்" யார்?

விற்பனைக்கும் விளம்பரத்திற்கும் உங்களது மின்னஞ்சல் முகவரிகளும் தொலைபேசி இலக்கங்களும் மிகவும் பயன்படும். பெருவாரியான மின்னஞ்சல் முகவரிகளும் தொலைபேசி இலக்கங்களும் திரட்டி வைத்திருந்தால் அவற்றின் மூலம மலிவாகவும் இலகுவாகவும் விற்பனைகளையும் விளம்பரங்களையும் செய்யலாம். இதனால் பலரும் உங்களதும் உங்கள் மூலமாக உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களினதும் மின்னஞ்சல்களையும் தொலைபேசி இலக்கங்களையும் பெற பலவழியான தந்திரங்களை மேற் கொள்கின்றனர். சிலரால் உங்கள் வங்கி கணக்குகள் கடன் அட்டை விபரங்களையும் சேகரிக்க முடியும்

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய தகவல் திருடர்கள்:
  1. முகவேடு(Facebook): கணனியில் முகவேடு உங்களை உங்கள் நண்பர்களுடன் இலகுவில் இணைப்பதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் கேட்டும்.  நீங்கள் கொடுத்தவுடன் உங்கள் நண்பர்களுகு முகவேடு உங்களுடன் நண்பர்களாக முகவேட்டில் இணையும்படி மின்னஞ்சல் அனுப்பும். அத்துடன் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தான் திரட்டிச் சேகரித்துக் கொள்ளும். உங்கள் கைப்பேசியிலும் முகவேட்டுச் செயலி (application) இருந்தால் அது உங்கள் கைபேசியில் உள்ள மற்றவர்களின் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உங்கள் நண்பர்களை உங்களுடன் இணைப்பதற்கு அனுமதி கேட்கும். நீங்கள் அனுமதித்தால் உங்கள் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை அது திரட்டிச் சேகரித்துக் கொள்ளும்.
  2. டுவிட்டர்: இதுவும் மற்ற பல சமூக வலைத் தளங்களும்முகவேட்டின் தந்திரத்தைக் கையாள்கின்றன.
  3. Foursquare: இத்தளமும் சமூக வலைத்தளங்கள் போலவே உங்கள் தகவலகளைத் திரட்டும்.
  4. Free Applications for your Smartphones: பல நவீன கைப்பேசிகள் அதில் உள்ள செயலிகள் (Applications) உங்கள் கைப்பேசிகளில் உள்ள தகவல்களை இலகுவில் சேகரிக்கக் கூடிய வகையில் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை உங்கள் கைப்பேசிகளில் பதியும் முன்னர் அவை கூறும் நிபந்தனைகளை யாரும் வாசித்துப் பார்ப்பதில்லை. அதில் உங்கள் தகவல் திரட்டும் உரிமையை அச்செயலிகளுக்கு நீங்கள் வழங்குகிறீர்கள் என்ற வரி உண்டு. சில செயலிகள் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகள் தொலைபேசி இலக்கங்களுடன் நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களையும்(SMS) திருடுகின்றன.
  5. யாஹூ: யாஹூவின் செயலியை உங்கள் கைப்பேசியில் இணைத்தால் அது உங்கள் குறுந்தகவல்கள் உடபடப் பலவற்றைச் சேகரிக்கும் வாய்ப்பு உண்டு.
  6. Flicker: இந்த வலைத்தளத்தின் செயலி உங்கள் கைப்பேசியில் இருந்தால் அதுவும் குறுந்தகவல்கள் உடபடப் பல தகவல்களைத் திரட்டும்.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய செயலிகள்

Monday 27 February 2012

ஒளிப்பதிவு செய்யும் ஓர விழிப்பார்வை

கள்ளத்தனமாகப் பார்த்த
பல நாட்கள்
விழியால் பேசிய
பல நாட்கள்
உடல்கள் உரசிய
பல நாட்கள்
உணர்வுகள் இணைந்த
பல நாட்கள்
எல்லாம் ஈடாகுமா
உண்மை அன்பு காட்டிய
ஒரு கணத்திற்கு

 ================

வென்றேன் எனத்
திமிரடையவும் வேண்டாம்
தோற்றேன் எனத்
துவளவும் வேண்டாம்
உழைத்தேனா என்பதை மட்டும்
எண்ணிப்பார்.


ஓர விழிப் பார்வை
என்னை ஒளிப்பதிவு செய்யும்
கமராவானது

நேர் விழிப்பார்வை
மலரம்பு வீசும்
எறிகணையானது

பார்க்காமல் நீ இருப்பது
உன்கண்களை
வதை முகாமாக்கியது

கனிவான இருவர் பார்வைகளின்
இனிய மோதலில்
இணைந்தன இரு இதயங்கள்

Sunday 26 February 2012

உப்பில்லாத் தீர்மானமும் மார்தட்டும் மஹிந்தரும் கடமை தவறிய கூட்டமைப்பும்.

அமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மஹிந்தர்
இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையி நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையும் இலங்கை அரசு நியமித்த மீளிணக்க ஆணைக் குழுஇன் அறிக்கையும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. ஐநா நிபுணர் குழு அறிக்கை இலங்கையில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் இழைக்கப்பட்டமைக்கான காத்திரமான ஆதாரங்கள் உள்ளன என்றது. மீளிணக்க ஆணைக்குழுவினரின் அறிக்கை இலங்கையில் போர்க்குற்றம்பற்றியோ அல்லது மானிடத்திற்கு எதிரான குற்றம் பற்றியோ எதுவும் கூறவில்லை. மீளிணக்க ஆணைக்குழு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் போரின்போது நடந்த சில அத்துமீறல் பற்றி மேலும் விசாரணைகள் தேவை என்றும் பரிந்துரைகள் செய்ந்திருந்தது. ஐநா நிபுணர்குழு அறிக்கை பற்றி ஐநா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி ஐநா செயலர் பான் கீ மூனிடம் வினவியபோது அது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்றார். இலங்கை அரசும் மீளிணக்க ஆணைக்குழு பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. இலங்கை அரசின் மீளிணக்க ஆணைக்க்குழுவின் அறிக்கையை தமிழர்கள் நிராகரித்து விட்டனர்.

அமெரிக்காவின் உப்புச் சப்பில்லாத் தீர்மானம்
பெப்ரவரி 27-ம் திகதி முதல் மார்ச் 23-ம் திகதி வரை நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக  ஒரு தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முனைப்புக் காட்டி வருகிறது. இந்தத் தீர்மானம் சில நாடுகள் இணைந்து கூட்டாகக் கொண்டுவரவிருக்கின்றன. அத்தீர்மானத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கின்றன:

1. மீளிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் மேலதிகமாகவும் நிறைவேற்ற உடனடி சட்டப் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுதலும் போரின்போது நடந்த பன்னாட்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ப்பாக நம்பகரமானதும் சுந்திரமானதுமான விசாரணை மேற்கொண்டு குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க வேண்டுதலும்.
2. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 20வது கூட்டத் தொடருக்கு முன்னர் மீளிணக்க ஆணைக்குழுவினரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும்  இலங்கையில் நடந்ததாகக் கருதப்படும் பன்னாட்டுச் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் தொடர்பாகவும் இலங்கை அரசு எடுக்கவிருக்கும் படிப்படியான நடவடிக்கைகள் பற்றி ஒரு விரிவான செய்ற்திட்டத்தி சமர்ப்பிக்க வேண்டுதல்.
3. படிப்படியான நடவடிக்கைகள் பற்றி ஒரு விரிவான செய்ற்திட்டங்களிற்கு மனித உரிமை உயர் ஆணையாளரும் மற்றும் மனித உரிமை சம்பந்தப்பட்ட அதிகாரமுடையவர்களும் இலங்கைக்கு ஆலோசனை வழங்க ஊக்குவித்தலும் அவற்றைப் பெற இலங்கையை ஊக்குவித்தலும்.

எமக்கும் அமெரிக்காவிற்கும் நன்கு தெரியும் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு யாரையும் தண்டிக்காது என்று. பன்னாட்டு நிபுணர்களைக் கொண்ட பகவதி ஆணைக்குழுவிற்கு என்ன நடந்தது என்று எமக்கும் தெரியும் அமெரிக்காவிற்கும் தெரியும். அண்மையில் பதவி விலகிய இலங்கை மனித் உரிமைக் கழக ஆணையர் தான் மனச்சாட்சிப்படி நடக்க முடியவிலலை என திரைமறைவில் கூறி பதிவி விலகிக் கொண்டது. எமக்கும் தெரியும் அமெரிக்காவிற்கும் தெரியும். மேற்படி மூன்று தீர்மாங்களும் இலங்கைக்கு வேண்டுகோள்களே தவிர கட்டளைகள் அல்ல. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க ஒரு பன்னாட்டு மட்ட விசாரணைக்குழுதான தமிழர்கள் வேண்டுவது. அமெரிக்கா முனைப்புக் காட்டும் தீர்மானம் பன்னாட்டு மட்ட விசாரணைக்கு தேவை என்ற கோரிக்கையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. குற்றவாளியையே நீதிபதியாக்குகிறது. தீர்மானத்தில் ஐநா நிபுணர்குழு அறிக்கைபற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்?

மார் தட்டும் மஹிந்தர்
அண்மையில் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ச தனது கூட்டாளிகளுடன் கதைக்கும் போது தான் எப்படி இந்தியாவை 13வது திருத்தத்திற்கு மேல் தமிழர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன் என்று சொல்லி ஏமாற்றினேன் என்றும் தான் எப்படி ஐநா நிபுணர்குழு அறிக்கையை இழுத்தடித்தேன் என்றும் எப்படி மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இழுத்தடிகிறேன் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டார் என லங்காஈநியூஸ் விபரித்துள்ளது. அது மட்டுமல்ல மஹிந்தர் தான் தனது நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்த படையினரைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று அடிக்கடி சொல்கிறார்.

கடமை தவறிய கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடர் நடக்கும் ஜெனிவாவிற்குச் சென்று தமிழர்களுக்கு இழக்கப்பட்ட/இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகளை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அரச சார்பு பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் ஜெனிவாவிற்குப் படையெடுத்திருக்கையில் தமிழர்பக்க நியாயங்களை தெரிவிக்கும் கடமை கூட்டமைப்புக்கு இருகிறது. ஆனால் திடீரென்று கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மாட்டோம் என்று அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கொழும்பில் இருந்து விடுவிக்கப்பட்ட மிரட்டல் மட்டும் காரணமா அல்லது டில்லியில் இருந்தும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதா? டில்லியின் தயவில்தான் கூட்டமைப்பு இப்போது நடமாடிக்க் கொண்டிருக்கின்றனர். ஜெனிவாப் பயணத்திற்கு டில்லி உதவவில்லையா? வாஷிங்டனில் இருந்து வரும் கட்டளை கூட்டமைப்பின் முடிவை மாற்றலாம்.

மஹிந்தரின் பிரச்சனைக் காலம் ஆரம்பித்து விட்டது
அமெரிக்கா வைத்துள்ள தீர்மான முன் மொழிவில் ஒரு கால அவகாசம் உள்ளது என்பது தான் தமிழர்களுக்கு சாதகமான அம்சம். அதை மஹிந்தர் நிறைவேற்ற வேண்டும் அல்லது அமெரிக்காவிற்கு இலங்கையில் சீனாவிற்கு இணையான அவிற்பாகம்  வழங்கப்பட வேண்டும் அத்துடன் சரத் பொன்சேக்கா விடுவிக்கப்படவேண்டும். இவற்றைச் செய்யும் நிலையில் மஹிந்தர் இல்லை. அவர் இன்னும் மூன்று ஆண்டுகளை தனது இழுத்தடிப்புத் தத்துவங்கள் (Medamulana theories) மூலம் கழிக்கலாம். அதன்பின்னர் அவர் ஒரு பன்னாட்டு விசாரணையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...