Friday 26 February 2010

இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதம்.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தயாரிக்கப் பட்டபோது இந்தியாவின் பேரினவாதியான ஜவகர் லால் நேரு மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப் படுவதைத் தடுத்தார். இந்தியாவில் உள்ளது ஒரு அதிகாரப் பரவலாக்கமே அதிகாரப் பகிர்வு அல்ல. அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டுமே. அதிகாரப் பரவலாக்கத்தில் பிராந்திய அலகுகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கும்.

இலங்கையில் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசியவாதம் வெற்றி பெற்றால் அது இந்தியப் பேரினவாதிகளின் ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற உணர்வில் இந்தியப் பேரினவாதம் 1980களில் செயற்படத் தொடங்கியது. அது இலங்கைப் பேரினவாதிகளுடன் கைகோத்துக் கொண்டது. அதிலிருந்து அது தமிழர்களுக்கு நண்பன் போல் நடித்து தமிழர்களுக்கு எதிரான மோசமான அடக்கு முறையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்தி இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாகக் கூறும் போது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கதிற்கு கூடுதலான எந்த ஒன்றையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கும் படி தன் இலங்கை அரசை வற்புறுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

இந்தியப் பேரினவாதத்தின் எல்லை தாண்டிய அடக்கு முறை முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த தமிழர்களுக்கு எதிரான் போருடன் முடிவடையவில்லை. தமிழ்த் உணர்வின் எந்த ஒரு அம்சத்தையும் இந்தியப் பேரினவாதம் விட்டு வைக்கப் போவதில்லை என்பதை அதன் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னரான காய் நகர்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கொள்கைகளின் அடிப்படையில் 2001-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. அது விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகளாக ஏற்று கொண்டதுடன் அதை வலியுறுத்தியும் வந்தது. அந்த அடிப்படையில் அது இலங்கயில் 2001 இலும் 2004 இலும் நடந்த தேர்தல்களில் வெற்றியீட்டியது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இப்போது இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருமாற்றம் கொள்கை மாற்றம் செய்யும் முயற்ச்சியில் வெற்றி கண்டு வருவதாகத் தெரிகிறது. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான சதிகளை மோசடிகளை வெளிக் கொண்டு வந்தவர்களை ஓரம் கட்டப் பட்டுள்ளனர். இவர்களை ஓரம் கட்டிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புது முகங்கள் இணைக்கப் பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் அகப் பட்டுள்ளதாக அதன் தலைவர் இராசவரோதயம் சம்பந்தனிடம் வினவியபோது அதை அவர் நீதி மன்றத்தில் குற்றவளி குற்றச்சாட்டை மறுப்பது போல் அதற்கு ஆதாரம் இல்லை என்றுதான் மறுத்தார். இந்தியா தமிழர்களுக்கு துரோகமிழைத்தது அதை நாம் நம்பமாட்டோம் என்று கூறவில்லை. இலங்கையில் செயற்படும் பல இந்திய அடிவருடிகளை இந்திய அடிவருடிகள் என்று நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே!

எல்லை தாண்டிய இந்தியப் பேரினவாதம் தமிழர்களுக்கு மட்டும்தான் விரோதமானதா? இந்தியா ஒரு புளிய மரம் அது தன் நிழலில் எந்த ஒரு மரத்தையோ ஒரு சிறு புல்லையோ வளரவிடாது என்று ரோஹண விஜெயவீர கூறியதை சிங்கள மக்கள் மறந்துவிட்டார்களா?

Thursday 25 February 2010

தப்பிக்கும் தப்புக்கள்


சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
தப்பிக்கும் தப்புக்கள்

மருத்துவ மனைகள்மேல் குண்டுகள்
மருத்துவர்கள் கைதுகள்
தண்ணீருக்கும் தடைகள்
மறைந்து போன உண்மைகள்


இனப் பிரச்சனைத் தீர்வும்
அதிகாரப் பரவலாக்கமும்
இணைந்து கொண்டன
காணாமற் போனோர் பட்டியலில்

மோதலுக்குப் பின் தேர்தல்
தேர்தலுக்குப் பின்னும் முன்னும் பிளவுகள்
ஒற்றுமையை வலியுறுத்திப் பிரிந்தனர்
முதுகெலும்பிழந்த அரசியல்வாதிகள்

தெளிந்து நிற்பர் மக்கள்
துணிந்து மீண்டும் எழுவர்
தேவை அவர்களுக்கு
ஒரு மூச்சு விடும் இடைவெளி

Wednesday 24 February 2010

உங்கள் ஐ-போன்களால் உங்களையே ஒற்றாடல் செய்யும் ஆபத்து


உங்கள் உயர்ரக கைத்தொலைபேசி மூலம் உங்களை ஒற்றுப் பார்க்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உங்கள் உரையாடல்களை ஒற்றுக் கேட்டல் உங்கள் கைத் தொலை பேசியின் பட்டரியை இயங்காமல் போன்றவற்றை உங்களுக்குத் தெரியாமலேயே செய்யும் rootkit என்னும் உளவு மென்பொருளை வலயத் திருடர்கள் உருவாக்கியுள்ளனர். இம் மென்பொருள் இலகுவாகத் தயாரிக்கக்கூடியது என்பது அடுத்த அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த மென்பொருள் தனது இருக்கையை தானே மறைக்கும் திறன் கொண்டது.
Rootkits are a well-known kind of malware that mask their own existence on the computer, and can be installed via e-mails that trick users into opening attachments.

இது பற்றி கருத்துத் தெரிவித்த ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வினோத் கணபதி என்பவர்: தற்போது கைப்பேசிகள் சிறிய கணனிகளாக மாறிவருவதால் அவை இப்படியான கிருமி மென்பொருள்களால் தாக்கப்படக்கூடும் என்றார்.
Smartphones are essentially becoming regular computers,’ said Vinod Ganapathy at Rutgers University in New Jersey. ‘They run the same class of operating systems as desktop and laptop computers, so they are just as vulnerable to attack.’

‘What we’re doing today is raising a warning flag,’ said fellow researcher Liviu Iftode. ‘We’re showing that people with general computer proficiency can create rootkit malware for smartphones. The next step is to work on defences,’ he added.

However, it is much harder to slip rootkits into smartphones, which tend to have strict rules on non-approved code being installed, say security experts.

‘The mobile phone malware threat is growing but it’s a tiny raindrop in a thunderstorm compared to regular attacks that strike Windows computers,’ said Graham Cluley of security company Sophos. -

from: Metro

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...