Friday 10 July 2009

மூன்று இலட்சம் தமிழர்களை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி?



மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாமில் அடைத்து வைத்து பணம் சம்பாதிக்கலாம்.

அதற்கு முதலில் தேவை பக்கத்தில் பாதக தேசம் என்று ஒன்று இருக்க வேண்டும்.
தமிழர்களை மிக மோசமான இருப்பிடத்தில் அடைத்து வைக்க வேண்டும்.
முதலில் கவனிக்க வேண்டியது இவர்களைத் தொடர்ந்து இப்படி வைத்திருத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். அதனால் வாரத்திற்கு 1500 என்ற கணக்கில் சாகடிக்கவேண்டும்.
இவர்கள் எல்லோரு ஒரேயடியாகச் சாகமல் இருக்க ஒரு நாளக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டும் கொடுக்க வேண்டும்.
இவர்களை காவல் புரியும் மனித மிருகங்களுக்கு அலுப்படிக்காமல் இருக்க இவர்களுக்கு சப்பாட்டு பொதிகளை வீசி விட்டு இவர்கள சண்டை பிடித்து அவற்றை எடுக்கும்படி பணித்து அவர்கள் சண்டை பிடிப்பதை இம் மனித மிருகங்கள் பார்த்து இரசிக்கும் படி அடிக்கடி செய்ய வேண்டும்.
ஒரு தமிழரை வெளியில் விடுவதானால் அமெரிக்க டொலர் 15000 அறவிட் வேண்டும்.
இவர்களை அடைத்து வைத்திருக்கும் முகாமுக்குள் முதல் வேலையாக ஒரு வங்கியைத் திறக்க வேண்டும். இவர்களுக்கு வெளி நாட்டில் உள்ள உறவினர்கள் பணம் அனுப்புவார்கள். அந்நியச் செலவாணி வருவாய் கிட்டும். இப்பணத்தையும் கொள்ளை அடிக்கலாம்.
முகாமுக்குள் கடைகள் திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.
முக்கிய்மாக கள்ளச் சாராயம் போன்ற தடை செய்யப் பட்ட மதுவகை போதைப் பொருட்கள் விற்பனை செய்யவும்
இக்கடைகளில் பொருட்களின் விலைகள் சாதாரண விலையிலும் பார்க்க மூன்று மடங்கு இருக்க வேண்டும்.
நோயாளர் ஒருவர் வெளியில் சென்று மருத்துவரை பார்க்க அனுமதிக்க ஐயாயிரம் ரூபா அறவிட வேண்டும். மருத்துவர் இவர்களுக்கு வழமையிலும் பார்க்க அதிகமான கட்டணத்தை அறவிட வேண்டும்.
பக்கத்து நாட்டில் இருந்து நடிகர்கள் மற்றும் பலர் சேர்ந்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து அனுப்புவார்கள் அதைச் சுருட்டிக்கொள்ளலாம். அவர்கள் தாம் கொடுத்தபணம் யாருக்கு எப்படிக் கொடுக்கப் பட்டது என்று கவலைப் படமாட்டார்கள்.
அவர்கள் அனுப்பிய பொருட்களில் தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை கொடுக்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் அனுப்ப அனுமதிக்கக் கூடாது. பணம் மட்டுமே.
வெளி நாட்டுத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது.
பொய்நா சபை இவை சட்ட விரோதமான முகாம்கள் என்று தெரிந்தும் அவற்றைப் பராமரிக்க பணம் தரும். அதில் சுருட்ட வேண்டியதைச் சுருட்டவும்.
இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் என்றால் இல்லை என்று கூறிப் பொய்நா சபையில் பாராட்டுவதற்கு பக்கத்தில் பாதக நாடும் மஞ்சீனா நாடும் இருக்கிறதே.
வில்லன் நம்பியாரும் பாதிகா குமார ஆசாமியும் பொய்நா சபையில் உங்களுக்குத் தேவையான படி நடந்து கொள்வார்கள்.
சர்வதேச நாணயமில்லாச் சதி உங்களுக்குத் தேவையான பணம் வாரி இறைக்கும். பக்கத்து பாதக நாடு மட்டும் பார்த்துக் கொண்டா இருக்கும். 500 கோடி தரும் உங்களுகு. அதை பாராட்டும் முதல்வரைத் தேர்ந்தெடுக்கத்தான் இளிச்ச வாயார்கள் பல கோடியினர் இருக்கின்றனரே.

Thursday 9 July 2009

இந்தியாவைக் கேவலப் படுத்திய இந்து ராம்


.
.

வவுனியாவில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு போரில் வென்றபின் வவுனியாவில் மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம் என்று அழைக்கப் படவேண்டிய இடைத் தங்கல் முகாம்களின் அடைத்து வைத்திருக்கிறது.

வன்னி இடைத்தங்கல் முகாம் நிலைமை பற்றி வவுனியா அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்தது:

சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோருக்கு சின்னம்மை நோய் பரவி இருந்தது இதில் பலருக்கு வாந்தி பேதியும் ஏற்பட்டுள்ளது.

இப்போது மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில் 64 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 34 பேர் உயிர் இழந்தனர். இதில் 24 பேர் இளைஞர்கள்..

மேலும் தகவல்: இலங்கையில் போர் நடந்த பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் 12 ஆயிரத்து 195 தமிழர்கள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தது:

அகதி முகாம்களை பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன். காலைக்கடன்களை கழிப்பதற்குக்கூட மக்கள் மணிக்கணக்கில் கியூவில் நிற்கிறார்கள். 5 பேர் மட்டும் இருக்கக்கூடிய கூடாரத்தில் 30க்கும் அதிகம் பேர் உள்ளனர். கூடாரத்தில் எழுந்து நின்றால், இடுப்பு எலும்பே முறிந்துவிடும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம் தெரிவித்தது: Human Rights Watch (HRW) comments: "The government's history of restricting the rights of displaced persons through rigid pass systems and strict restrictions on leaving the camps heightens concerns that they will be confined in camps much longer, possibly for years."

அல் ஜசீரா செய்தி;

வன்கொடுமையும் மனித மீறல் குற்றச்சாட்டும் முகாம்களில் தொடரும் சித்திரவதையும், தொடரும் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மீதான வன்புணர்வும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனஇதனால் ஏராளமான பெண்கள் கற்பமடைந்துள்ளனர் என்று உதவி குழு ஊழியர் குறிப்பிட்டுள்ளார்..

இந்தக் கொடுமைகளை செய்யக் கூடியவர்கள் யார் என்று என்னால் சொல்லமுடியவில்லை, இதுபோன்ற வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முகாம்களில் அதிக அளவில் காணமுடிகிறது. என்றாலும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் இவையெல்லாம் ராணுவத்தால் தான் நிகழ்த்தப் படுகிறது என்று .,

இவர்கள் எல்லாம் இப்படிக் கூறிய போது சென்னையில் இருந்து வரும் இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் ராம் அவர்கள் ஜுனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் வவுனியாவில் இருக்கும் முகாமைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஜுனியர் விகடனின் கேள்வி: ''வவுனியா முகாம்களில் திறந்தவெளி சிறைச் சாலை மாதிரி - சொல்லப்போனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகளுக்குள்ளே அவர்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறதே..?''

சிங்கள ரத்னா இந்து ராமின் பதில்: ''இந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள், அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்பது உண்மை. முகாமைச் சுற்றி வேலி இருப்பதும் உண்மை. அங்கே காவலுக்கு ராணுவம் இருப்பதும் உண்மை. ஆனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகள் என்ப தெல்லாம் வெறும் கற்பனை. இப்படிச் சொல்வதால் அங்கே வேறு பிரச்னைகள் வரவே வாய்ப்பில்லை என்று அர்த்தமில்லை. மழை வந்தால் அங்கே புது பிரச்னைகள் வரலாம். ஆனால், நம்மூரில் இருக்கும் அகதிகள் முகாம்களைவிட அவை பல மடங்கு மேம் பட்டதாக இருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்!''

வவுனியாவில் உள்ள முகாம்களின் மிக மிக மோசமான நிலை பற்றி மேலுள்ள தகவல்கள் பல தரப்பிலும் இருந்து வெளியாகியபோது இந்தியாவில் உள்ள முகாம்களை விட வவுனியா பன்மடங்கு மேம் பட்டது என்று ஒரு இந்தியப் பத்திரிகையாளர் கூறுகிறார். அப்படி ஒரு கேவலமான முகாம்களை நடத்தும் இந்தியா எவ்வள்வு கேவலமானது என்பதை சிங்கள ரத்னா இந்து ராம் அம்பலப் படுத்திவிட்டார்.

சிங்கள இன வெறியர்களான ஜேவிபி கட்சியினர் கூட வவுனியா முகாம்கள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா முகாம்கள் சட்ட விரோதமானாவை

எவரையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்க முடியாது. அப்படித் தடுத்து வைப்பதானால் அவர்கள் முதலில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டு நிதிபதியின் உத்தரவின் பேரிலேயே தடுத்து வைக்க முடியும். இம் முகாம்கள் சட்ட விரோதமானவை என் இன்னர் சிற்றி ஊடகம் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Wednesday 8 July 2009

பத்மநாதன் தொடர்பாக தனது கருத்தை மாற்றினார் வைக்கோ ஐயா.


ஒரு கரந்தடிப் படைத் தலைவன் என்றும் மறைந்துதான் இருப்பான். அவன் இறந்து விட்டான் என்று பொய்க் கதை கட்டுவது சுலபம். அவன் இறந்த பின்பு இறக்கவில்லை என்று சொல்லுவதும் இலகு!
.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என அதன் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்த போது அவரை கடுமையாக தாக்கி அறிக்கை விட்ட வை. கோபாலசாமி ஐயா அவர்கள் இப்போது ஜுனியர் விகடனுக்கு கொடுத்த போட்டியில் அவரைத் தாக்குவதைத் தவிர்த்துள்ளார்.
.
விகடனின் கேள்வி: ''பிரபாகரன் இறந்து விட்டதாக புலிகளே சொல்லி இருப்பது பற்றி...''
.
வைக்கோ ஐயாவின் பதில்:
''தலைவர் உயிரோடு இருக்கிறார் என உறுதியாக சொன்ன செல்வராசு பத்மநாபன், இப்போது 'இல்லை' எனச் சொல்கிறார். இந்த விவகாரத்தில் நான் யாரையும் குற்றம்சாட்டும் நிலையில் இல்லை. ஆனாலும், எனக்கு வந்த உறுதியான உண்மைத் தகவல்களை வைத்து, 'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' என்பதை இப்போதும் அடித்துச் சொல்கிறேன். அவர் மிக பத்திரமான இடத்தில் இருக்கிறார் என்பதுதான் என் நம்பிக்கை. உரிய நேரத்தில் ஈழப் போரை மறுபடியும் அவர் முன்னெடுத்து முன்னேறுவார். பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரைப் பற்றி நானறிந்த விவரங்களை இப்போதைக்கு சொல்ல முடியவில்லை!''
.
பிரபாகரனின் மரணம் தொடர்பாக செ. பத்மநாதனின் கருத்தில் உள் அர்த்தம் இருக்கலாம். அவர் இன்றைய சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு எற்ப செயற்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கலாம்.
.
புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பைச் சிதைக்க ஆரிய சிங்களக் கூட்டமைப்பும் அதன் அடிவருடிகளும் பெரும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடிவருடிகளின் கொடுமை இன்னும் ஓயவில்லை. அவர்கள் உண்மையில் தமிழர்களின் நலனுக்காகப் போராடவந்ததாக இருந்தால் (அவர்கள் சொல்வது போல்) அவர்கள் வருடும் பாதங்களுக்கு உரியவர்களிடம் வதை முகாம்களில் இருக்கும் அப்பாவித் தமிழர்களை விடுவிக்கும் படி கெஞ்சலாம்!

Tuesday 7 July 2009

தமிழ்த் தேசிய வாதம் அடக்கப் பட்டு விட்டதா?


தமிழர்களின் ஈழக் கனவை இருபது நாடுகளின் உதவியுடன் அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டி விழாக் கொண்டாடியது.
.
தமிழினக் காவலர்கள் என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் இனி இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் தயவில்தான் வாழவேண்டும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் தாம் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் தயவில்தான் வாழ முடியும் என்று முடிவு செய்து பல காலங்கள் ஆகி விட்டன.
.
தமிழ்த்தேசியவாதிகள் போல் ஈழத்து ஆயுத போராட்டதுக்குள் தம்மை நுழைத்துக் கொண்டு பின் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் மிரட்டலுக்கு அடி பணிந்து தமிழ்த்தேசிய எதிர்ப் பாளர்களாக மாறி தமக்கு என ஒரு கொள்கை இல்லாமல் இலங்கையிட் ஆட்சி பீடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு அடிவருடிகளாக மாறி தமிழ்த்தேசிய வாதத்தை ஒடுக்க சகல உதவிகளும் புரிந்தவர்கள் புலிப் பாசிசம் தேற்றது என்று சொல்லி மார்தட்டிக் கொள்கின்றார்கள்.
.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறி தமிழ்த் தேசிய வாதத்தை ஆரம்பித்து வைத்த ஜி. ஜி பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய வாதம் முடிந்து விடவில்லை. அதன் பின் தந்தை செல்வா தலைமையில் இன்னும் வீறு கொண்டுதான் நின்றது. அவருடனும் அது முடியவில்லை. அவருக்குப் பிறகு வந்தவர்கள் தமது தீவிரத்தை கூட்டாமல் குறைக்க முற்பட்டபோது. தமிழ்த் தேசியத்தின் தலைமை அவர்களை விட்டு ஆயுதப் போராளிகளின் கைகளுக்குச் சென்று விட்டது.
.
இன்று தமிழ்த் தேசியவாதம் பலவீனப் பட்டு விட்டது தமிழ்ர்கள் ஏதோ கொடுக்கிறதை வாங்கிக்கொள்ள வேண்டியது தான் என்ற கதை பலமாக அடிபடுகின்றது. ஆறு மாதத்திற்கு முன்னர் இல்லாத இந்த நிலைப் பாடு இன்று எழுந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? இதற்கு முன்பு இருந்த ஒன்று இப்போது இல்லை. அது என்ன என்ற கேள்விக்கு விடை தேடினால் தமிழ்த்தேசிய வாதத்தைப் பாதுகாத்தவர்கள் யார் என்று புரியும்.
.
தமிழ்த்தேசிய வாதம் 1970 களின் ஆரம்பத்தில் இருந்து வீறு கொண்டு எழ எழ அதற்கு எதிரான அடக்கு முறைகளும் மனித நியமங்களுக்கும் பன்னாட்டு நியமங்களுக்கும் முரணாக அநியாய வடிவம் பெற்றன. இந்த அநியாயத்திற்கு எதிரான தமிழ்த்தேசிய வாதத்தின் நடவடிக்கைகளின்மீது இலகுவாக பயங்கரவாத மென்ற முத்திரை குத்தப் பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய வாதத்தின் நியாயத்தன்மை புறக்கணிக்கப் பட்டது. அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியவாதத்தின் வளர்ச்சி தமக்கு ஆபத்தானதாக பல நாடுகளும் எண்ணிக் கொண்டன. ஆயுதப் புரட்சி மூலம் எவரையும் அதிகாரத்திற்கு வர அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப் பாட்டையும் எடுத்துக் கொண்டன. இவற்றின் விளைவாக தமிழ்த்தேசிய வாதத்தின் ஆயுத பலம் வெற்றீகரமாக மழுங்கடிக்கப் பட்டது.
.
தமிழ்த்தேசிய வாதத்தின் நியாயத் தன்மை இன்றும் உறுதியாகத்தான் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் எதிரிகளின் கொடூரத் தன்மை மேலும் தீவிரமடைந்து நிற்கிறது. இந்நிலையில் தமிழ்த்தேசிய வாதம் அடக்கப் பட்டு விட்டதா? படுமோசமான அடக்கு முறைகளைக் கொண்ட வன்னி இடைத் தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களுக்கு உள்ளேயே சுவரொட்டிப் போராட்டம் தொடங்கி விட்டது. திவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துள் கரும்புலிகள் தினத்தன்று பூமாலை போடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய வாதம் அடங்க மறுக்கிறது.
அது புது வடிவம் தேடி நிற்கிறது.

Monday 6 July 2009

ஏ. ஆர். ரஹ்மானுக்கு இன்னும் ஓர் உலக ரீதியிலான கௌரவம்


தமிழ்த்திரைப் படம் ரோஜாவில் மலர்ந்த ஏ. ஆர். ரஹ்மானிற்க்கு இன்னும் ஒர் உலகப் புகழ் கிடைத்துள்ளது. Fastcompany என்ன்ய்ம் உலக வர்த்தக சம்மந்தமான நிறுவனம் உலகின் வியாபாரத்தில் உருவாக்கும் திறனுடைய நூறுபேரைத் தெரிவு செய்தது. அந்த நூறு பேரில் ஏ. ஆர். ரஹ்மானும் ஒருவர். இவரது இசை இந்திய பொப் இசையை மிள் உருவாக்கம் செய்தது என்று இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

இதில் முதலாவது இடம் ஐ-பொட்டின் ஜொனாத்தன் ஐவ் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பில் கேற்றின் வலது கரமாக விளங்கும் மெலிண்டா கேற்றிற்கும் கிடைத்துள்ளது. HP COMPUTER இல் வேலைசெய்யும் பிரித் பனர்ஜிக்கு பதினோராம் இடமும் பத்மசிறி வோறியர் என்னும் மொட்டர்ரொலாவில் வேலைசெய்யும் பெண்மணிக்கு 33-ம் இடமும் ஏ. ஆர். ரஹ்மானிற்கு 47வது இடமும் கிடைத்துள்ளது.

ஆனாலும் அவன் நடக்கிறான்.



இருளே வழியானது

துயரே துணையானது

எங்கும் அவலங்கள்

ஓலங்களே இசையானது

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

துணைக்கென வந்தோர்

துரோகிகளாயினர்

தீர்க்கவென வந்தோர்

தீர்த்துக் கட்டினர்

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

பாரா முகங்களே

பழக்கங்கள் ஆயின

அள்ளி வைப்போரே

அருகில் நின்றனர்

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

அடுத்துக் கெடுப்போரே

அயலவர் ஆகினர்.

தடுக்க வேண்டியோரே

தண்டம் கொடுத்தனர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

பொய்களை பலவற்றை

திரும்ப திரும்பச் சொல்லி

உண்மைகளாக்கினர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

உண்மைகளை எல்லாம்

திரும்ப திரும்பத் தாக்கிப்

பொய்களாக்கினர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

எல்லாமே இழந்தாலும்

நம்பிக்கை இழக்காததால்

கீழ்த்திசையில் ஒரு ஒளிக்கீற்றை

நோக்கி அவன் நடக்கின்றான்

Sunday 5 July 2009

பத்மநாதன் கதாநாயகனா? அல்லது வில்லனா?



ஈழத் தமிழ் இனம் வதைபடும் நேரத்தில், விடுதலைப் புலிக‌‌ள் இய‌‌க்கத்தின் தலைவர் பிரபாகன் இறந்து விட்டதாக ந்த அமைப்பின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம். இது தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக வைத்த குற்றச் சாட்டு.

.

பத்மநாதன் இந்திய உளவுத்துறையிடம் விலை போய் விட்டார். விடுதலைப் புலிகளின் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தார். விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் வாங்குவதாகக் கூறிப் பணத்தைச் சுருட்டிவிட்டு வெறுங் கப்பலை அனுப்பி அக்கப்பல் ஆயுதத்துடன் வருவதாக இலங்கை அரசிற்கு தகவல் கொடுத்து அக்கப்பலை அழிக்கப் பண்ணிவிட்டவர். இது போன்ற குற்றச் சாட்டுக்களை தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் பத்மநாதனுக்கு எதிராக வைக்கிறார்கள்.

.

குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். இவர் ஆரம்ப காலத்திலிருந்தே விடுதலைப்புலிகளின் அமைப்பில் உறுப்பினர். 1955ம் ஆண்டு காங்கேசந்துறையில் பிறந்த பத்மநாதன் இளவயதிலேயே ஈழவிடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்கு இவர்தான் பொறுப்பாளர். பல நாட்டுக் காவல்துறைகளினதும் உளவுத்துறைகளினதும் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கெட்டிக்காரர். இவர் பல மொழிகள் கற்றவர். பல நாட்டு குடியுரிமை பெற்றவர். கடற்புலிகளின் மூளையாக இருந்தவர் பத்மநாதன். கப்பல் கட்டுமானப் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த இஸ்ரேலுக்கு இணையாக கப்பல் கட்டுவதில் புலிகளும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள் சர்வதேச ஆய்வாளர்கள்.

.

பத்மநாதனை 2007 செப்டம்பர் மாதம் பாங்கொக்கில் கைது செய்யப் பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஆரிய சிங்கள உளவுப் படைகள் அங்கு விரைந்தன. ஆனால் அவர் கைது செய்யப் படவில்லை என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. இதைப்பற்றி அதிரடி.கொம் என்ற இணையம் இப்படித் தெரிவித்தது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து (கே.பி) 20 மில்லியன் டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு தாய்லாந்துப் பொலிஸார் அவரை விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.

2004ம் ஆண்டு பத்மநாதன் நோர்வேயில் மருத்துவச் சிகிச்சை பெற்றபோது அவரை தமது நாட்டிற்கு கடத்தும் படி ஆரிய சிங்களக் கூட்டமைப்பு பலத்த முயற்ச்சி எடுத்து தோல்வி கண்டதாகவும் கூறப்படுகிறது.

.

பத்மநாதனின் சாதுரியத்திற்கு ஒரு உதாரணம்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய நாடு ஒன்றிடமிருந்து இலங்கை அரசு நவீனரக ஆயுதங்களை வாங்கியது. அவற்றை கொழும்புக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு கப்பலை வாடகைகு அமர்த்தினர். அது விடுதலைப் புலிகளின் கப்பல். இலங்கை அரசை ஏமாற்றி இதச் செய்தவர் பத்மநாதன்! தெற்காசிய நாட்டில் இருந்து ஆயுதங்களோடு கிளம்பிய கப்பல், கொழும்பின் காலி துறைமுகத்துக்கு செல்வதற்கு பதிலாக முல்லைத் தீவுக்குப்போய் புலிகளுக்கு ஆயுதத்தை இறக்கியது. காலித் துறை முகத்திற்கு கப்பல் இன்னும் வந்து சேரவில்லையே என எதிர் பார்த்திருந்த இலங்கை அரசு, விசாரணையின் பின் நடந்ததை அறிந்து அதிர்ந்து போனது. அதிலிருந்து இன்றுவரை ஆயுதக் கொள்முதல் செய்தால் அதைத் தமது ராணுவத்தின் மூலமே கொழும்புக்குக் கொண்டுவருகிறது இலங்கை அரசாங்கம்.

.

பத்மநாதன் துரோகியாக இருந்தால் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலை மறைவாகி இருக்கலாம். அதைவிட்டு ஏன் தொடர்ந்தும் தமிழ்த்தேசிய போராட்டத்தில் ஈடுபடுகிறார்? இத்தனைக்கும் அவர் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உளவுப் படையினரால் தொடர்ந்து தேடப்படுபவர். 17-05-2009 வரை வன்னியுடன் தொடர்பு வைத்திருந்தவர். விடுதலைப் புலிகளின் அரசியற் துறையைக் காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தவரைப் போர் வெறியர்கள் ஏமாற்றி விட்டனர்.

.

புலிகளில் எஞ்சியிருப்பதில் முக்கியமானது அதன் பன்னாட்டுக் கட்டமைப்பு. அதைச் சிதைக்க ஆரிய சிங்களக் கூட்டமைப்பு கடும் முயற்ச்சி எடுக்கும் என்பது உண்மையே! அதன் ஒரு அங்கம் தான் பத்மநாதனுக்கு எதிரான பொய்ப்பிரசாரங்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...